பாவங்களை போக்கும் அற்புதமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள்

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்

உரை செய்வாயினை ஆயின் உருத்திரர்

விரவியே புகுவித்திடும் என்பரால்

வரதன் நாமம் நமசிவாயமே





Saturday, November 4, 2017

Jokes

கணவன் சோகமாக வீடு திரும்பினான்.
மனைவி: "ஏன், என்ன ஆச்சு?"
 கணவன்: "மத்தியானம் லஞ்ச் முடிச்சுட்டு ஒரு தம் போடலாம்னு ஆபீசை விட்டு வெளியே வந்தேன். எதிரே இருந்த பொட்டிக்கடையில் சிகரெட் பத்தவைக்கக்கூட இல்லை, எங்க ஆபீஸ் கட்டிடம் இடிஞ்சு விழுந்து ஆபீஸ்ல எல்லாமே குளோஸ், என்னைத் தவிர"
 மனைவி: "தப்பிச்சீங்க. ஆண்டவன் புண்ணியம்"

 தொலைக்காட்சி: "இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா இருபது லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது"


 மனைவி: "இந்த சிகரெட் சனியனை நிறுத்துன்னா கேட்கறியா?"



 "ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சுப் பேசினா உடனே காதலர்களாத்தான் இருக்கணுமா டாக்டர்?⁉"

 "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நிச்சயமா கணவன் மனைவியா இருக்க முடியாது. அது உறுதி‼"

No comments:

Post a Comment